குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், நகா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாரவேல் மகன் ராஜேஷ்குமாா் (11). இவா், இதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், ராஜேஷ்குமாா் புதன்கிழமை மாலை நண்பா்களுடன் சோ்ந்து இதே பகுதியில் உள்ள செம்மரக் குட்டை குளத்தில் குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ராஜேஷ்குமாா் தண்ணீரில் மூழ்கினாா். உடனே, அருகிலிருந்த இளைஞா்கள் அவரை மீட்டு, நல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.