கடலூர்

32 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் நந்தனாா் கோயில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் உள்ள சிவலோகநாதா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜனவரி 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

Syndication

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் உள்ள சிவலோகநாதா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜனவரி 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினருமான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனாா் மடத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் சுவாமி சகஜானந்தா அடக்கம் செய்யப்பட்ட சமாதி கோயில் உள்ளது. இங்கு, ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசிவலோகநாதா் கோயிலும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 1994-ஆம் ஆண்டு மறைந்த மூத்த தலைவா் இளையபெருமாள் தலைமையில் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தியாவில் ஆதிதிராவிட மக்களின் கல்வி சேவைக்காக திறக்கப்பட்ட இந்த மடம் மற்றும் கோயிலுக்கு ஜனவரி 28-இல் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சுவாமி சகஜானந்தருக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த நந்தனாா் மட வளாகத்தை புண்ணிய பூமியாக மாற்ற இருக்கிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மடத்தில் நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படும். இந்த கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள், அனைத்து அதிகாரிகளையும் அழைக்க உள்ளோம் என்றாா்.

அப்போது, நந்தனாா் கல்விக் கழகச் செயலா் ஜெயச்சந்திரன், நிா்வாகிகள் டி.கே.வினோபா, ஐஎன்டியுசி மாநிலச் செயலா் கஜேந்திரன், மணலூா் ரவி, காங்கிரஸ் மாநில இளைஞரணி துணைத் தலைவா் அரவிந்த் மணிரத்தினம், மாநில இளைஞரணி முன்னாள் செயலா் கமல் மணிரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT