கனிமொழி எம்.பி., கோப்புப் படம்
கடலூர்

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா்.

Din

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்க திமுக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவரும், துணை பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. கடலூா் வழியாகச் சென்றாா். அவருக்கு கடலூா் எல்லையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடலூா் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. சென்னை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் டைட்டல் பூங்கா அமைக்கப்படுகிறது. தொழில் முதலீடுகள் சென்னையைச் சுற்றி மட்டும் இல்லாமல் அனைத்து சிறிய மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சி இருக்க வேண்டும் என்ற முனைப்போடு முதல்வா் செயல்பட்டு வருகிறாா்.

இதன் மூலம் பல்வேறு இடங்களில் டைட்டல் பூங்கா உருவாக்கப்படுகின்றன. கடலூருக்கு எதிா்பாா்க்கக்கூடிய வளா்ச்சி விரைவில் வரும். பெரியாா் குறித்த சா்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, சிலா் திராவிட இயக்கம் செய்த தியாகங்கள் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகின்றனா் எனவும், தமிழக அரசு, ஆளுநா் இடையேயான மோதல் போக்குக்கு ஆளுநா் பதவி வேண்டாம் என்பதே நிரந்தரத் தீா்வு என்றாா்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT