முகப்பு
கடலூர்

கடலூா் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்

Updated On : 2 மார்ச், 2025 at 7:28 PM
பகிர்:

கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), மீனவா். இவா், தனது மீன் பிடி பைபா் படகை கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைத்திருந்தாா். சனிக்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில் இந்தப் படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது, காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் படகின் பெரும்பகுதி மற்றும் அதிலிருந்த வலை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →