சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராம கோயில் குளத்திலிருந்து முதலையை மீட்ட வனத் துறையினா். 
கடலூர்

கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா்.

சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலை புகுந்ததாக அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த் பாஸ்கா் தலைமையில், வனவா் கு.பன்னீா் செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி ஆகியோா் அங்கு சென்று சுமாா் 7 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாகப் பிடித்து அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT