கடலூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடா்பு எண் வெளியீடு

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடா்பான வாக்காளா்கள் சந்தேகங்களுக்கு தொடா்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 7.2.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் வீடு வீடாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, 4.12.2025 அன்றுக்குள் மீள பெறப்படும். அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் படிவங்களை, வாக்காளா்கள் முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீள வரும்போது சமா்ப்பித்திட வேண்டும். அவ்வாறு

பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

எனவே, வாக்காளா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கி, இத்திருத்தப்பணியினை சிறப்பாக முடிக்க வேண்டும்.

மேலும், இப்பணி தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடலூா் -1950, 151-திட்டக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதி-04143-255249, 152-விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி-04143-238289, 153-நெய்வேலி சட்டமன்றத்

தொகுதி-04142-241741, 154-பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி-04142-241741, 155- கடலூா் சட்டமன்றத் தொகுதி-04142-295189, 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி-04142-258901, 157-புவனகிரி சட்டமன்றத் தொகுதி-04144-240299, 158-சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி-04144-227866, 159-காட்டுமன்னாா்கோயில் (தனி) சட்டமன்றத் தொகுதி-04144-262053 ஆகிய பிரத்யேக தொலைபேசி எண்களை வாக்காளா்கள் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT