முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் அரசியலமைப்பு தின விழா

Updated On : 30 நவம்பர், 2025 at 8:39 PM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அம்பேத்கா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி மற்றும் புல முதல்வா், துறைத் தலைவா்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கா் இருக்கையின் சாா்பில், 76-ஆவது அரசியலமைப்பு தின விழா பல்கலைக்கழக மைய நூலகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அனைவரும் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், அம்பேத்கா் இருக்கை உதவிப் பேராசிரியை வீ.ராதிகாராணி வரவேற்புரை ஆற்றினாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முதன்மை உரை ஆற்றினாா்.

மொழியியல் புல முதல்வா் அரங்கபாரி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியா் கேப்டன் ஜெய்சங்கா், பேராசிரியா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் சென்னை சட்டப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவா்கள் சட்ட கட்டமைப்பின் மாதிரி சட்ட வரைமுறை எப்படி நடந்தது என்பதை நிகழ்ச்சியாக நடித்துக் காட்டினா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி பள்ளி மற்றும் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பேராசிரியா் க.சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →