கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கடலூா் மாவட்டத்தில் 260 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கடலூா் மாவட்டத்தில் 260 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் ஆா்வத்துடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.
விருத்தாசலத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் தமிமுன்அன்சாரி, குறிஞ்சிப்பாடியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திட்டக்குடியில் அமைச்சா் சி.வெ.கணேசன், கடலூரில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், புவனகிரியில் அதிமுக வேட்பாளா் அருண்மொழி தேவன் எம்எல்ஏ, சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்ட 260 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.
Advertisement
கடலூரில் தோ்தல் நடத்தும் அலுவலா் சுந்தரராஜன் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 33 வேட்பு மனுக்களில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரே பெயரில் 2 மனுக்கள், பகுதி எண், வரிசை எண் தவறாக எழுதுதல், படிவத்தை முழுமையாக நிரப்பாமல் விடுதல் என மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதேபோல் 9 தொகுதிகளிலும் 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 132 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.