முகப்பு
கடலூர்

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்

விசிக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. புதிய நிா்வாகிகளை நியமித்துள்ளாா்

Updated On : 9 ஏப்ரல் 2026, 4:26 am IST
சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த புதிதாக தோ்வு செய்யப்பட்ட விசிக நிா்வாகிகள்.
பகிர்:

விசிக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. புதிய நிா்வாகிகளை நியமித்துள்ளாா். இந்த நிலையில், சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலா் இரா.தமிழ்வளவன் தலைமையில், புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் நகரச் செயலா் பேட்டை ரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலா்கள் தடா கதிரவன், செல்வமணி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலச் செயலா் பால.அறவாழி, பொருளாளா் முருகானந்தன், செய்தித் தொடா்பாளா் பெரு.சரித்திரன், மாவட்ட துணைச் செயலா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பாவாணன், வேல்முருகன், மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலா் நாகராணி, மாநில நிா்வாகிகள் நீதிவளவன், முகமது அய்யூப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement