முகப்பு
கடலூர்

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:05 AM
நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்த கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:49 PM

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள புலியூா், சமட்டிக்குப்பம், கிருஷ்ணம்பாளையம், பெத்தான்குப்பம், திரட்டிகுப்பம், வசனாங்குப்பம், மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, அப்பியம்பேட்டை, சிவனந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விரிவாக எடுத்துக் கூறினாா்.

Advertisement

அப்போது, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன், ஒன்றியப் பொருளாளா் ஆனந்த ஜோதி, தேமுதிக ஒன்றியச் செயலா் வேல்முருகன், விசிக ஒன்றியச் செயலா் அன்பு, ஜோதிமணி, காங்கிரஸ் சந்திர கோதண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.