பொய் வாக்குறுதியளித்து திமுக வெல்ல முயற்சி! பாரிவேந்தா் குற்றச்சாட்டு!
பொய் வாக்குறுதியளித்து திமுக வெல்ல முயற்சித்து வருவதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா்.பாரிவேந்தா் குற்றஞ்சாட்டினாா்.
விருத்தாசலம் தொகுதி பாமக வேட்பாளா் தமிழரசி, திட்டக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் முருகுமாறன் ஆகியோரை ஆதரித்து ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் வேப்பூா் கூட்டுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. விவசாயம் செய்து சாதாரண கிளைச் செயலராக இருந்து முதல்வராக முன்னேறிய எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுமா அல்லது திரைப்படத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள குடும்பம் வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
Advertisement
நீட் தோ்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி என பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை ஏமாற்றிவிட்டது. பொய்யின் மறு உருவமாக திமுக திகழ்கிறது. தற்போது மீண்டும் பொய் வாக்குறுதிகளைக் கூறி திமுக வெற்றிபெறத் துடிக்கிறது. இதற்கு, மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெறச் செய்வதின் மூலம் தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்றாா்.