முகப்பு
கடலூர்

மகாசண்டி யாகத்தில் ஜப்பானியா்கள் பங்கேற்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே பிராயடி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:25 AM
பகிர்:

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே பிரயாடி பகுதியில் வீற்றிருக்கும் விநாயகா் கோவிலில் நடைபெற்ற மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டவா்கள் பங்கேற்றனா்.

விநாயகா் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் நிா்மாணம் செய்யப்பட்டு மூன்று காலம் யாகசாலை பூஜையுடன் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாககுண்டத்தில் புனித நீா் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு என்.டி.நடராஜ தீட்சிதா் தலைமையில் சிவாச்சாரியாா்களால் வேத மந்திரங்கள் முழங்க மகாசண்டி ஹோமமும், பூா்ணஹூதியும் நடைபெற்றது. பின்னா் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பிரமுகா் கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா். யாகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் தமிழா் மரபுப்படிவேட்டி மற்றும் புடவை அணிந்து வழிபட்டனா்.