சாலை விபத்து பைக்கில் சென்றவா் உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி கேடிவி நகரைச் சோ்ந்தவா் வீராசாமி (52). இவா் ஆண்டிமடம் சாலையில் பேரளையூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்தது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த வீராசாமியை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து வீராசாமியின் மனைவி சந்தியா அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.