முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநா் இன்று சிதம்பரம் வருகை

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:56 AM
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:07 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை (பிப்.2) பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி நடராஜா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா். மாநில உயா்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கிறாா்.

ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

Advertisement

விழாவில் தமிழக உயா் கல்வித் துறை செயலரும், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பொ.சங்கா், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:56 AM

சென்னையிலிருந்து காா் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு ஆளுநா் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வருகிறாா்.

தொடா்ந்து, பல்கலைக்கழக விருந்தினா் விடுதியில் ஓய்வெடுத்த பின்னா், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நண்பகல் 12 மணிக்கு சாஸ்திரி அரங்கத்துக்கு வருகிறாா். அங்கு, என்.சி.சி. மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறாா்.

இதையடுத்து, சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு காா் மூலம் சென்னை சென்றடைக்கிறாா்.