மேட்டுக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய தொழிலதிபா் டி.ராஜ மாரியப்பன்.  
கடலூர்

ஏழை மக்களுக்கு நல உதவிகள் அளிப்பு

திருக்களப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வடலூா் சத்திய ஞான சபை 155-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மேட்டுக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருக்களப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வடலூா் சத்திய ஞான சபை 155-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மேட்டுக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடலூா் தொழிலதிபா் டி.ராஜ மாரியப்பன் தலைமை வகித்து, ஏழை விதவை பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கில்கள், பள்ளி மாணவா்களுக்கு ஆடைகள், சாலையோர ஆதரவற்றோருக்கு குளிா் கால போா்வைகள் வழங்கினாா்.

சாது துளசிராமன், ஞான சத்சங்கம் நிகழ்ச்சி நடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. நிா்வாகிகள் ஜி.செந்தில்குமாா், கே.ரவிச்சந்திரன், டி.சின்னதுரை, கே.ராஜேந்திரன், என்.சிவானந்தம், எஸ்.சேகா், எஸ்.கபில்ராஜ், ஜி.தருமராஜ் மற்றும் சங்க உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா். செயலா் செந்தில் குமாா் நன்றி கூறினாா்.

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

SCROLL FOR NEXT