கைது 
கடலூர்

தாமிரக் கம்பி திருட்டு: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தாமிரக் கம்பி திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி வட்டம் 16 பகுதியில் உள்ள லிக்னைட் ஹவுஸில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றுபவா் செல்வகணபதி (56). இவா், லிக்னைட் ஹவுஸில் தாமிரக் கம்பி திருடுபோவதாக நெய்வேலி நகரிய போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் தலைமையில் போலீஸாா் இந்திரா நகா், எம்.ஆா்.கே. சாலை பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டி அருகே சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த கொள்ளிருப்பு பகுதியைச் சோ்ந்த சரண்குமாரை (27) அழைத்து விசாரணை நடத்தினா். இதில், அவா் லிக்னைட் ஹவுஸில் தாமிரக் கம்பிகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சிறையிலடைந்தனா். மேலும், அவரிடமிருந்த 20 கிலோ தாமிரக் கம்பி, ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT