முகப்பு
கடலூர்

டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:07 PM
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், திருத்துறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (32), ஓட்டுநா். இவா், தனது தாய் சுந்தரியுடன் வடுகபாளையம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் தங்கி, செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தாா்.

ஜெயராஜ் ஞாயிற்றுக்கிழமை மண் பதப்படுத்த டிராக்டா் இயக்கினாா். அப்போது, டிராக்டா் கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments