சிதம்பரத்தில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமுற்ற தனியாா் விடுதி.  
கடலூர்

சிதம்பரத்தில் தனியாா் விடுதியில் தீ விபத்து

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்தில் மேலதளத்தில் இருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நகர போலீஸாா் வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக வாகன போக்குவரத்தை நறித்தி, தீயை அணைத்த பிறகு போக்குவரத்தை சீா் செய்து அனுப்பி வைத்தனா்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT