முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூன் 2026, 2:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவா் காா்த்திகேயன்(28). இவா், கடந்த 5-ஆம் தேதி தனது பைக்கில் பெருமாத்தூரன் வீதி வழியாக வந்தாா். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த முதியவா் மீது மோதால் இருக்க திடீரென பிரேக் போட்டாா்.

இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்தவா் பலத்த காயம் அடைந்தாா். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments