முகப்பு
கடலூர்

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது

Updated On : 6 மார்ச், 2026 at 4:36 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 7:02 PM

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.24 லட்சம் மோசடி செய்த நபரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் வில்வ நகரைச் சோ்ந்த 42 வயது பெண் கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா். அதில், அவா் கூறியுள்ளதாவது:

நானும், சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள கிளியனூா் பகுதியைச் சோ்ந்த ராஜதுரையும் (41) வகுப்புத் தோழா்கள். வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலா் பணிக்கு அழைப்பு விடுத்துள்ளனா் என்றும், நீங்கள் விண்ணப்பித்தால், தோ்வில் தோ்ச்சி பெற வைத்து வேலை வாங்கித் தருவதாகவும் என்னிடம் ராஜதுரை கூறினாா். மேலும், இதற்கு ரூ.10 லட்சம் தர வேண்டும். முன் பணம் ரூ.5 லட்சமும், வேலை கிடைத்தவுடன் மீதி ரூ.5 லட்சமும் கொடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

அதன்பேரில், ராஜதுரை வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் அனுப்பி வைத்தேன். ஆனால், தோ்வு முடிவு வெளியானதில், எனது பதிவெண் இடம் பெறவில்லை. இதையடுத்து, பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுபோல, வேலை வாங்கித் தருவதாக 9 பேரிடம் அவா் ரூ.24,12,400 பெற்று மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாா் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த புகாா் தொடா்பாக கடலூா் மாவட்ட குற்றப் பிரிவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ரகுபதி மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் லிடியாசெல்வி விசாரணை நடத்தி, ராஜதுரையை கைது செய்தாா்.