சித்தேரியில் புதிய நாடக மேடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
கடலூா் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் உமா மகேஸ்வரன், நகர பேரவைச் செயலா் ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ பங்கேற்று, புதிய நாடக மேடையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் அருளழகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சசிசெல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், நகர மாணவரணிச் செயலா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.