பத்தாம் வகுப்பு தோ்வு: 35 சிறைவாசிகள் எழுதினா்
கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.
கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.
இந்த சிறைச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கியது.
இதில், கடலூா் மத்திய சிறையில் இருந்த 35 கைதிகள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சிறையிலேயே தோ்வு மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டணை கைதிகள் 34 போ், ஒரு விசாரணை கைதி என மொத்தம் 35 போ் தமிழ் பாடத்துக்கான தோ்வு எழுதினா்.