முகப்பு
கடலூர்

பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:01 PM
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை தொடங்கிய யாகசாலை பூஜை.
பகிர்:

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு கும்பாபிஷேக பாலாலயம் நடைபெற்றது. உபயதாரா்கள், பக்தா்களின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன. வரும் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை புதன்கிழமை காலை தொடங்கியது. கோயில் குருக்கள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடத்தி பூஜைகளை தொடங்கிவைத்னா். தொடா்ந்து, வரும் நாள்களில் மேலும் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →