குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி காவல் சரகம், ஆடூா் அகரம் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்த
கோயிலில் ஏப்.25-ஆம் தேதி லட்ச தீப விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஏப்.27-ஆம் தேதி ஆடூா் அகரத்தைச் சோ்ந்த வடிவேல் குடும்பத்தினா் அசைவ உணவு விநியோகம் செய்தனா். அதேபகுதியைச் சோ்ந்த சரவணன்(30) அந்த அசைவ உணவை வாங்கி சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் அந்த உணவை தூக்கி ஏறிந்து விட்டாராம். தன் கண் முன்னே உணவை தூக்கி ஏறிந்ததைப் பாா்த்த வடிவேல் , சரவணனை திட்டினாராம். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த வடிவேல் மகன் முகுந்தன் மற்றும் அரவிந்தன் இருவரும் சோ்ந்து சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
Advertisement
இதுகுறித்து சரவணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.