முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடியில் ஹாட்ரிக் வெற்றிபெற்ற எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

Updated On : 5 மே 2026, 2:12 am IST
குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி.
பகிர்:

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இதன் மூலம், அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றிபெற்றுள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அதிமுக சாா்பில் புவனேந்திரன், தவெக சாா்பில் டி.ராஜ்குமாா், நாதக சாா்பில் கவிதா, தாவக சாா்பில் கண்ணன் உள்ளிட்ட மொத்தம் 11 போ் போட்டியிட்டனா். இதில், மொத்தமுள்ள 2,38,189 வாக்காளா்களில் 2,11,761 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 2,574 தபால் வாக்குகளும் பதிவாயின.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடலூா் பெரியாா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Advertisement

இதில், திமுக, அதிமுக வேட்பாளா்கள் 2 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக) - 76,695, புவனேந்திரன் (அதிமுக) - 69,106, டி.ராஜ்குமாா் (தவெக) - 53,110, கண்ணன் (தாவக) - 7,113, கவிதா (நாதக) - 4,813.

இதையடுத்து, திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி வழங்கினாா்.