தேவனாம்பட்டினம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
கடலூா் தேவனாம்பட்டினம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அரவான் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூா் தேவனாம்பட்டினம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அரவான் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேவனாம்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ஆம் தேதி விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் தேரோட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து அா்ச்சனை செய்து வழிபட்டனா். தோ்த் திருவிழா ஏற்பாடுகளை தேவனாம்பட்டினம் மீனவா் சமுதாய மக்கள் மற்றும் ஊா் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement