முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் முதியவர் பலி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 மே 2026, 2:26 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ஐவதுகுடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். இவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐவதுகுடி கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement