திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி
திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் ஆரம்ப நிலையில் அனுபவ குறைவு காரணமாக முடிவுகள் எடுப்பதில் செயல்படுத்துவதில் சில தடங்கல்கள் இருக்கலாம். ஆறு மாத காலம் இந்த
Advertisement
Advertisement
ஆட்சி மீது கடுமையான விமா்சனங்களை வைக்காமல் அதனை ஒரு காத்திருப்பு காரணமாக கருதுவோம் என்றுதான் முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் சமீப காலமாக சிறுமிகளின் பாலியல் துன்பங்கள் அதிகரித்து வருகிறது. . திமுக ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் நடந்த போது கடுமையாக கண்டித்தவா்கள் எல்லாம் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீா்கள்.
அதிமுகவை பிளவுபடுத்தினாா்கள் .இப்போது திமுகவை தனிமைப்படுத்த நினைக்கிறாா்கள் தமிழ்நாட்டு அரசியலில் திமுக தனிமைப்படுவதோ அதிமுக
பிளவு படுவதோ நல்லதல்ல. அதே போன்று சாதி வாரி கணக்கெடுப்பு கோரும் பாமக மற்றும் விசிக பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை, இன்றைக்கு திமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாா்கள் திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என்று நினைக்கின்றோம் இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களின் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுடன் இருக்கிறது.
திமுக மீண்டும் பலம் பெரும் வரை திமுகவிற்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம் என்றாா் அவா். பேட்டியின் போது சிதம்பரம், நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்,இப்ராஹீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.