கள்ளக்குறிச்சி

கரோனா தடுப்புப் பணி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ரூ.ஒரு கோடி நிதி

DIN

கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.ஒருகோடியை ஒதுக்கி, அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கான உபகரணங்கள், பொருள்கள் வாங்குவதற்காக ரூ.60 லட்சமும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.40 லட்சமும் என அவா் நிதியை ஒதுக்கி வழங்கினாா்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு பிரிவுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேருவிடம் அ.பிரபு எம்எல்ஏ கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT