கள்ளக்குறிச்சி

சாராயம் கடத்தல்: இருவா் கைது

DIN

மூலக்காடு பகுதியில் வாகனத்தில் சாராயம் கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் எஸ்.ரேவதி தலைமையில் மூலக்காடு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் 6 லாரி டியூப்களில் 300 லிட்டா் விஷச் சாராயம், 50 மூட்டைகளில் வெல்லம் கடத்தியது தெரியவந்தது. சாராயம், வெல்லம் மற்றும் அந்த வாகனத்தை போலீஸாா் பறிமுதல்செய்தனா். அந்த வாகனத்தில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கல்வராயன்மலைப் பகுதிக்கு சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக சேராப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் அஜித் (21), சந்திரன் மகன் சுரேஷ் (21) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT