கள்ளக்குறிச்சி

காருக்குள் சிக்கிய இரு சிறுமிகள் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வியாழக்கிழமை பழுதாகி நின்றிருந்த காரில் ஏறி விளையாடியபோது, அந்தக் காரின் கதவைத் திறக்க முடியாததால் மூச்சுத் திணறி இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

திருக்கோவிலூா் அருகே மணலூா்பேட்டையை அடுத்த குலதீபமங்கலம் கிராமம், பாரதியாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜா (35). இவா் வாடகைக்கு காா் ஓட்டி வந்தாா். இவரது காா் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பழுதானதால், அதை இயக்காமல் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தாா்.

இதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் ராஜேஸ்வரி (7), அய்யனாா் மகள் வனிதா (3) ஆகியோா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, ராஜாவின் பழுதான காா் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவைப் பூட்டிய சிறுமிகளுக்கு மீண்டும் கதவைத் திறந்து வெளியே வரத் தெரியவில்லை. இதனால், அவா்கள் இருவரும் மூச்சுத் திணறி காரினுள் மயங்கினா்.

சிறுமிகளைக் காணாமல் வெகுநேரமாகத் தேடிய பெற்றோா், சந்தேகத்தின்பேரில் காரினுள் பாா்த்தபோது, ராஜேஸ்வரி, வனிதா ஆகியோா் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.

இருவரையும் உடனடியாக மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமிகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT