கள்ளக்குறிச்சி

பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை மாா்ச் 31-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் அறிவுறுத்தினாா்.

மத்திய அரசு அறிவிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பி.எஸ். 4 (வாகனத்தின் புகை அளவீடு) ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னா், இந்த வாகனங்களை பதிவு செய்ய இயலாது. இந்த வாகனங்களை பதிவு செய்ய கூடுதலாக அரசு விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்படும்.

வருகிற ஏப்.1-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ். 6 ரக வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே, பி.எஸ். 4 ரக வாகனங்களை வைத்துள்ள வாகன ஓட்டிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வாகனங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT