கள்ளக்குறிச்சி

கிராம வளா்ச்சித் திட்டம்: தயாரித்தல் பயிற்சி நிறைவு

DIN

கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கடந்த நவ.9-ஆம் தேதி தொடங்கி, 38 நாள்களாக நடைபெற்று வந்த கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்களுக்கான திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி வியாழக்கிழமை (டிச.31) நிறைவடைந்தது.

கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்கள் 368 பேருக்கு இரு நாள்கள் வீதம் 32 நாள்கள் 16 அணிகளாகவும், முன் களப்பணியாளா்கள் 230 பேருக்கு ஒரு நாள் வீதம் 6 நாள்கள் 6 அணியாகவும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் து.நடராஜன், அ.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.கணேசன் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட க.மாமனந்தல், காட்டனந்தல், பெருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம வளா்ச்சி திட்டக்குழு உறுப்பினா்கள் 24 போ் பங்கேற்றனா். பயிற்றுநா்கள் க.முத்துக்குமாா், க.சந்திரா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT