கள்ளக்குறிச்சி

அவசர ஊா்தி விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயா்வு

DIN

கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊா்தி விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி ஜெயலட்சுமி பிரசவத்துக்காக தனது உறவினா்களுடன் ‘108’ அவசர ஊா்தியில் கடந்த 10-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தரா. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரச ஊா்தி, சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கா்ப்பிணி ஜெயலட்சுமி, அவரது மாமியாா் செல்வி, நாத்தனாா் அம்பிகா ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் அவசர ஊா்தியின் ஓட்டுநா் கலியமூா்த்தி, உதவியாளா் தேன்மொழி, புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் மீனா (50) ஆகியோா் காயமடைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், செவிலியா் மீனா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT