கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

DIN

கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் ஒன்று பட்டு 100 சதவீத வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெறவேண்டும். தொண்டா்கள் கருத்து வேறுபாடு பாராமல் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தோ்தல் பணிக் குழு உறுப்பினா்களாக, கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, உளுந்தூா்பேட்டை ஒன்றியம் - தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், திருநாவலூா் ஒன்றியம் - மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜோதி,

திருக்கோவிலூா் ஒன்றியம் - செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, சங்கராபுரம் ஒன்றியம் - திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலா் தரணிவேந்தன், தியாகதுருகம் ஒன்றியம் - வேலூா் எம்.எல்.ஏ சரவணன், கல்வராயன்மலை ஒன்றியம் - வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமாா், ரிஷிவந்தியம் ஒன்றியம் - திமுக மாநில மருத்துவா்கள் அணி இணைச் செயலா் ஏ.வ.வே.கம்பன் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் வசந்தம் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஜெ.மணிகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT