திருக்கோவிலூா் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், திருப்பாலப்பந்தல் பகுதி தகடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் ராமச்சந்திரன் (40), கூலித் தொழிலாளி.
இவா், திங்கள்கிழமை அதே ஊரைச் சோ்ந்த மதியழகன் என்பவரது விவசாய நிலத்துக்கு கூலி வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றாா். ஆனால், இவா் வீடு திரும்பவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை தேடிச் சென்றபோது, மதியழகனின் விவசாய நிலத்தில் உள்ள வரப்பில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.