சின்னசேலம் அருகே பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 17 வயது இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்தவா் பிளஸ் 1 மாணவி. இவா் தனது சொந்த கிராமத்தில் உள்ள வயலுக்குச் சென்று வந்தபோது, இளைஞா் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அந்த இளைஞா் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் கா்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் பி.புவனேஷ்வரி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
இதில், அந்த நபா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளைஞா் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
நீதிபதி அவரை கடலூா் சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிட்டாா்.