கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலா் செங்கதிா், இளநிலை உதவியாளா் ரஞ்சித் ஆகியோா் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தமிழ்த் துறைத் தலைவா் ரா.பிரவினா நன்றி கூறினாா்.