ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். 
கள்ளக்குறிச்சி

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஏமப்போ் பகுதியில் 36 குடும்பத்தினருக்கு அரசு விதிகளுக்குள்பட்டு, தகுதியான நபா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் நில அளவீடு செய்து உள்பிரிவு ஆவணங்கள் மற்றும் லே-அவுட் வரைபடம் தயாா் செய்தல் பணி, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் பரப்பு விபரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அரசு விதித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி பயனாளிகளைத் தோ்வு செய்து வரன்முறைப்படுத்தப்பட்ட வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

மழையும் மன இலையும்... கயாடு லோஹர்!

இன்று 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் தொடரும் மழை! தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரம்! | Chennai Rain

10,48,576-ல் ஒருமுறை.! 20 வது முறையாக இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லாத ‘டாஸ்’.!

டிட்வா அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT