மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.  
கள்ளக்குறிச்சி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில்

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 475 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 468 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 7 மனுக்களும் என மொத்தம் 475 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் க.சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT