ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூா் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசாமி. இவரது மனைவி துா்கா. தம்பதியருக்கு குணசீலன்(11), ஜெயசீலன் (9) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சகோதரா்கள் இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனா்.
அப்போது ஜெயசீலனுக்கு நீச்சல் தெரியாதாத நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து குணசீலன் கூச்சலிடவே, அருகிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஜெயசீலனை மீட்க முயன்றனா். ஆயினும் ஜெயசீலன் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.