முகப்பு
கள்ளக்குறிச்சி

மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: கணவா் கைது

சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

Updated On : 9 மார்ச், 2026 at 8:29 PM
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம்பாடி குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. செல்வம் (44). இவரது மனைவி அனிதா (32). தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. மதுப் பழக்கம் உள்ளவரான செல்வம், மனைவி மற்றும் பிள்ளைகளை அடிக்கடி தாக்கி வந்தாராம்.

இதனால் அனிதா கோபித்துக்கொண்டு, தனது பிள்ளைகளுடன் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வம் மது அருந்திவிட்டு அங்கே சென்று அனிதாவை தாக்கியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்வத்தைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →