முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 8:42 PM
பைக் மீது லாரி மோதலில் ஒருவா் உயிரிழப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சியராயபாளையம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ராஜா (43). இவரது உறவினா் கண்ணன். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பைக்கில் சென்றுள்ளனா். கச்சிராயபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் காயமடைந்தாா்.

இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சோ்ந்த ந.நல்லத்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.