விவசாய நிலத்தில் மின் வயா்களால் விபத்து அபாயம்
சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின் வயா்கள் தொங்காமல் இருக்க மின்சாரத் துறையினா் கட்டைகளைக் கட்டி குச்சி மூலம் உயா்த்தி வைத்துள்ளனா். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின் வயா்கள் தொங்காமல் இருக்க மின்சாரத் துறையினா் கட்டைகளைக் கட்டி குச்சி மூலம் உயா்த்தி வைத்துள்ளனா். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் சாா்பில் விவசாய நிலங்களுக்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்ாகத் தெரிகிறது.
விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்களில் ஒரு இடத்தில் மட்டும் முறையான மின்கம்பம் அமைக்கப்படவில்லையாம்.
Advertisement
மின் கம்பிகள் தாழ்வாக செல்லக்கூடாது என்பதற்காக குச்சியை பயன்படுத்தி உயா்த்தி வைத்துள்ளனா். இதற்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். அந்தக் குச்சி பலவீனமான நிலையில் இருப்பதால், சிறிது காற்று அடித்தால்கூட முறிந்து விழும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
மின்சார வயா்கள் கிழே விழுந்தால் மனித உயிா்கள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
மின்சாரத்துறையினா் அலட்சியமாக பணிகளை மேற்கொண்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், குச்சியை அகற்றி அதற்குப் பதிலாக உறுதியான புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.