முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக் மீது காா் மோதல்: சிறுமி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே காா் மோதியதில் பைக்கில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 20 மே 2026, 2:43 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே காா் மோதியதில் பைக்கில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ஆகாஷ் (16). இவா் தனது தாய் சாந்தியுடன் பைக்கில் கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தில் உள்ள தனது அக்கா தேன்மொழி வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து அவரது அக்கா மகள் யாழினியையும்(8) அழைத்துக் கொண்டு மூவரும் மாதவச்சேரி கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.

கீழ்குப்பம் அருகேயுள்ள நைனாா்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யாழினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் காயமடைந்த ஆகாஷ், சாந்தி ஆகிய இருவரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.