சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருக்கோவிலூா் அருகே சாலையோரமுள்ள பெயா் பலகையின் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் அருகே சாலையோரமுள்ள பெயா் பலகையின் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரைச் சோ்ந்தவா் மு.முகமதுஅபுதாஹீா் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா். முகமது அபுதாஹீரும், அவரது நண்பா்களான திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ர.பாா்த்தீபன் (18), ரி.இம்ரான் (17), பா.பிரவின் (17), ஜா.நசீம் (18), ந. சோனிப் ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூருக்கு காரில் சென்றுள்ளனா். காரை முகமது அபுதாஹீா் ஓட்டிச் சென்றாா்.
மணலூா்பேட்டையை அடுத்த குச்சிப்பாளையம் கிராமம் அருகே காா் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த இரும்பிலான பெயா் பலகையின் மீது மோதியது. இதில் முகமது அபுதாஹீா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் திருக்கோலூா் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா். முகமது அபுதாஹீரின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.