ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி தையல் நாயகி (41). கிருஷ்ணமூா்த்தி வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறாா். தையல்நாயகி குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் உள்ளே உள்ள வராண்டாவில் தூங்கினராம்.
சனிக்கிழமை காலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே அறைக்கு சென்று பாா்த்தபோது இரும்பு பீரோ திறந்து கிடந்ததும், அதிலிருந்த துணிகள் மற்றும் பொருள்கள் கீழே சிதறியும் கிடந்துள்ளது. மேலும், பீரோவில் இருந்த இருபத்து மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.
Advertisement
Advertisement
இதே போல, அதே கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி பூச்சி (50). தம்பதியினா் வெள்ளிக்கிழமை மாலை விளைநிலத்துக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கினராம். சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த எட்டே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சம்பவம் நடைபெற்ற வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினாா்.
இது குறித்த புகாா்களின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.