தேமுதிக டிஜிட்டல் பேனருக்கு தீ வைப்பு
கள்ளக்குறிச்சி, ஜன. 8: கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் தே.மு.தி.க. டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பேனருக்கு தீ வைத்ததில் பேனர் நடுவில் தீயில் கருகியது. கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை
புதுச்சேரிதேமுதிக டிஜிட்டல் பேனருக்கு தீ வைப்பு
கள்ளக்குறிச்சி, ஜன. 8: கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் தே.மு.தி.க. டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பேனருக்கு தீ வைத்ததில் பேனர் நடுவில் தீயில் கருகியது. கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை
கள்ளக்குறிச்சி, ஜன. 8: கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் தே.மு.தி.க. டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பேனருக்கு தீ வைத்ததில் பேனர் நடுவில் தீயில் கருகியது.
கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஏமப்பேரில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாநாடு குறித்து ஊர் பகுதியான சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த புதன்கிழமை பேனரை வைத்தனர்.
அப்போது ஊர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் இங்கே பேனர் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அமைதிக் குழுக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் என்.மணி தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. கணேசன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு முதலில் போலீஸôர் அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்க வேண்டும். இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டால் பேனர்கள் அகற்றப்படும் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அ.முரளி, எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் டிஜிட்டல் பேனரின் மையப் பகுதியில் தீ வைத்து விட்டனர். இதில் பேனரின் நடுப்பகுதி கருகியது. இதனால் சனிக்கிழமை அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.