புதுச்சேரி

டி.டி.வி.தினகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ.

DIN

அதிமுகவை விட்டு ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ள டி.டி.வி.தினகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் அதிமுகவை விட்டு விலகிவிட்டதாகக் கூறியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கட்சித் தலைமை என்ன முடிவை எடுத்தாலும் அதற்கு புதுவை அதிமுக கட்டுப்படும்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற தமிழக அரசு தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதே நிலைதான் புதுவையிலும் உள்ளது. எனவே, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் விட்டு திமுக வெளியேறுமா என்பதை திமுகவினர் தெரிவிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT