புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் எதிரே கடலூர் சாலையில் அரச மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுவை - கடலூர் சாலை, முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே இருந்த அரச மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப் பணித் துறை ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.